என்னுடைய அனுபவக் குறிப்புகளுக்குள் செல்லும்முன் முதலில் இந்த மருத்துவரின் இந்த காணொளியை காணுங்கள். வீட்டில் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது, எப்பொழுது மருத்துவமனையை அணுகவேண்டும், என்ன சிகிச்சைகள் எடுக்க வேண்டும் என்று எளிதாக, தெளிவாக விளக்குகிறார். https://www.youtube.com/watch?v=Z-GP-masaV0 இனி என்னுடைய அனுபவக் குறிப்புகள் 1. இன்றைய தேதியில் காய்ச்சல் வந்தால், அது பெரும்பாலும் கொரானா தான். உடனே டெஸ்ட் எடுத்து விடுங்கள். அரசு எடுக்கும் இலவச டெஸ்ட் என்றால் பாசிட்டிவ் என்றால் கார்பரேசனில் இருந்து உங்களை 2 நாட்களுக்குள் போனில் அழைப்பார்கள். 2 நாட்கள் ஆனாலும் அழைப்பு வரவில்லை என்றால் நெகடிவ் என்று அர்த்தம். (போனை ஸ்விட்ச் ஆப் செய்யாமல் வைத்து கொள்ளவும். போனை மனைவி அல்லது மற்றவர்களிடம் தந்து விட்டு நீங்கள் நன்றாக ஓய்வெடுங்கள்). 2. உடனடியாக ரிசல்ட் தேவைப்படுபவர்கள் தனியார் மருத்துவமனை / லேபுகளுக்கு சென்று டெஸ்ட் கொடுங்கள். இடத்தை பொறுத்து ரூ.1000 லிருந்து 2000 வரை ஆகும். அதிகபட்சம் 8 மணி நேரத்திற்குள் பாஸிட்டிவ் அல்லது நெகடிவ் என்று ரிசல்ட் வந்து
"சொந்தங்களை மாதிரி யாரும் சந்தோசப்படுத்தவும் முடியாது.. சொந்தங்களை மாதிரி யாரும் கஷ்டப்படுத்தவும் முடியாது..!!" இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு ஞாயிறு அன்று பல நாட்களுக்குப் பின்னால் எங்கள் நெருங்கிய சொந்தங்களுடன் பெற்றோர்கள் வசிக்கும் வீட்டில் ஒரு கேதரிங் நடந்தது. அனைவரும் சேர்ந்து படம் பார்த்து வெகு நாட்கள் ஆனதால் மதிய உணவுக்குப் பிறகு OTT யில் ஒரு படம் பார்க்க முடிவு செய்தோம். அப்போது இந்தப் படம் என்னுடைய அக்கா மகளாலும், அவருடைய கணவராலும் என்னிடம் பரிந்துரைக்கப்பட்டது. இப்படம் ரிலீஸ் ஆனபோதே அக்கா மகளும், சொந்தங்களில் உள்ள சில இளவட்டங்களும் என்னிடம் இப்படத்தைப் பார்க்க சொன்ன போது.. காரணம் கேட்டதற்கு.. அண்ணன் - தங்கை பாசம் கதை என்றார்கள்.. "ம்க்கும்.. எவன் இதற்கெல்லாம் *நேரத்தை வேஸ்ட்* பண்ணுவான்..!!" என்று மனதில் எண்ணிக்கொண்டு அந்த ஒரு காரணத்திற்காகவே அப்படத்தை தவிர்த்து வந்தேன். ஆனால் அன்றும் அப்படம் பரிந்துரைக்கப்பட்டது. நான் ஒரு காமடி படம் பாக்கலாம் என்றேன், மனைவி வழக்கம்போல் திரில்லர் என்றார், அம்மாவும் ஏற்கனவே இப்படம் பார்த்து விட்டதால் வேண்டாம் என்றார், ஆனாலும
Yes, The smallest coffins are the heaviest! :( ஒரு இரண்டு வயதுக் குழந்தை இந்த மொத்த உலகமும் பார்த்துக் கொண்டிருக்க கொஞ்சம் கொஞ்சமாக துடித்து இறந்திருக்கிறது. இந்த துயர சம்பவத்திற்கு யார் காரணம் என்று எந்த ஒரு சரியான விசாரணையும் மேற்கொள்ளாமல் சிறுவனின் பெற்றோர்களுக்கு நிதி வழங்கியது ஒரு தவறான முன்னுதாரணம். இது ஏதோ.. அரசால் பொது இடத்தில் போடப்பட்ட ஆழ்துளை கிணறில் விழுந்து அக்குழந்தை இறக்கவில்லை. மாறாக குழந்தை தன் பெற்றோர்களின் சொந்த நிலத்தில் அவர்களால் போடப்பட்ட கிணறில் விழுந்து இறந்திருக்கிறது. அதனால் பெற்றோர்களின் அலட்சியம் தான் இதற்க்கு காரணம், அதனால் அவர்கள் தண்டிக்கப் படவேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். இல்லை.. இது தெரியாமல் நடந்த விபத்து, இதற்கு பெற்றோர்களைக் காரணமாக்க முடியாது என்று வேறு சிலரும் கூறுகிறார்கள். பெற்றோர்களும் அது ஏழு வருடத்திற்கு முன்பாக போடப்பட்டு பிறகு மூடப்பட்ட ஆழ்துளை கிணறு. அதன் மேல் ட்ராக்டர் எல்லாம் ஒட்டி இருக்கிறோம். சமீபத்தில் பெய்த மழையால் தான் அந்தப் பகுதியின் மண் உள்வாங்கி அதனால் மீண்டும் திறந்து கொண்டது என்கிறார்கள்
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள்..