என்னுடைய அனுபவக் குறிப்புகளுக்குள் செல்லும்முன் முதலில் இந்த மருத்துவரின் இந்த காணொளியை காணுங்கள். வீட்டில் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது, எப்பொழுது மருத்துவமனையை அணுகவேண்டும், என்ன சிகிச்சைகள் எடுக்க வேண்டும் என்று எளிதாக, தெளிவாக விளக்குகிறார். https://www.youtube.com/watch?v=Z-GP-masaV0 இனி என்னுடைய அனுபவக் குறிப்புகள் 1. இன்றைய தேதியில் காய்ச்சல் வந்தால், அது பெரும்பாலும் கொரானா தான். உடனே டெஸ்ட் எடுத்து விடுங்கள். அரசு எடுக்கும் இலவச டெஸ்ட் என்றால் பாசிட்டிவ் என்றால் கார்பரேசனில் இருந்து உங்களை 2 நாட்களுக்குள் போனில் அழைப்பார்கள். 2 நாட்கள் ஆனாலும் அழைப்பு வரவில்லை என்றால் நெகடிவ் என்று அர்த்தம். (போனை ஸ்விட்ச் ஆப் செய்யாமல் வைத்து கொள்ளவும். போனை மனைவி அல்லது மற்றவர்களிடம் தந்து விட்டு நீங்கள் நன்றாக ஓய்வெடுங்கள்). 2. உடனடியாக ரிசல்ட் தேவைப்படுபவர்கள் தனியார் மருத்துவமனை / லேபுகளுக்கு சென்று டெஸ்ட் கொடுங்கள். இடத்தை பொறுத்து ரூ.1000 லிருந்து 2000 வரை ஆகும். அதிகபட்சம் 8 மணி நேரத்திற்குள் பாஸிட்டிவ் அல்லத...
நி லாவைக் காட்டி குழந்தைகளுக்கு சோறு ஊட்டிய காலம் முடிந்தது.. இனி Coca-cola, KFC and McDonalds போன்ற கம்பனிகளின் லோகோக்களை, விளம்பரங்களைக் காட்டி சோறு ஊட்டும் காலம் இது..! புரியவில்லையா...? விரைவில் அது போன்ற பெரிய கம்பனிகளின் லோகோக்கள், விளம்பரங்கள் நமக்கு வானத்தில் தெரியப் போகிறது. Pic credit: The Hindu\Reuters\StartRocket StartRocket , என்ற ரஸ்யா startup ஒன்று விண்வெளியில் விளம்பரங்களை போடப் போகிறதாம். அதற்காக ஒரு 200 மிகச் சிறிய செயற்கைக்கோள்களை அனுப்பி, அவைகளை ஒரு grid போல ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நிறுத்தி, அதன் மூலம் சூரிய ஒளியை நமக்கு எதிரொலிக்க செய்து, அதன் மூலம் எழுத்துகளையும், படங்களையும் அங்கிருந்து படம் காட்டப் போகிறார்களாம். உதாரணத்திற்கு KFC என்ற எழுத்தை காட்ட வேண்டுமானால்.. K என்ற எழுத்தின் உயரம் மட்டும் 3.75 kms வருமாம். சென்ற வாரம் இதற்கான promo வீடியோ விட்டுருக்காங்க. ஆனால் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இதனை bad idea என்கிறார்கள். "ஏறத்தாள 20,000 க்கு மேற்பட்ட மனிதனால் அனுப்பப்பட்ட சாதனங்கள் தற்...
சிஸ்டம் சரியில்லைதான். ஆனால் அது எவ்வளவு சரியில்லை என்று தெரியுமா..? சம்பவம் 1: குப்பைகளை எடுக்கும் மாநகராட்சி தொழிலாளர்களின் உடையில் எழுதியிருந்த "குப்பைகளை வீடுகளிலேயே தரம் பிரியுங்கள்" என்ற வாசகத்தை கண்டு... அப்படி பிரிக்காமல் மக்கும் குப்பை மற்றும் (பிளாஸ்டிக் போன்ற) மக்கா குப்பை என்று அனைத்தையும் நாம் சேர்த்தே போடுவதால் அதனை பின்னால் பிரிப்பவர்களுக்கு ஏற்படும் சிரமமும், அதனால் அரசுக்கும், பூமிக்கும் ஏற்படும் நஷ்டங்களை எல்லாம் கவனத்தில் கொண்டு அவ்வாசகத்தை கண்ட அன்றே மனைவி, மக்களை அழைத்து தரம் பிரிப்பதன் தேவைகளை வலியுறித்தி இரண்டு குப்பை கூடைகளை (Dust bins) வைத்து அதனை வீட்டில் செயல்படுத்தி விட்டோம். பிள்ளைகளும், நாங்களும் ஆர்வமாக குப்பைகளை போடும்போதே தரம் பிரித்து போட்டு வந்து.. குப்பை வண்டி வந்ததும், அவர்களிடம் இரண்டு கூடைகளையும் கொண்டு போய் கொடுத்தால்.. அதனை இரண்டையும் வாங்கி வண்டியில் ஒரே குப்பையில் போடுகிறார்கள்.. ஏன் என்று கேட்டால்.. அப்படி தரம் பிரித்து வாங்கும் வண்டி FC க்கு சென்றுள்ளதாம்.. அது வரும் வரை இவ்வண்டியில் தான் வாங்குவார்களாம். ...
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள்..