என்னுடைய அனுபவக் குறிப்புகளுக்குள் செல்லும்முன் முதலில் இந்த மருத்துவரின் இந்த காணொளியை காணுங்கள். வீட்டில் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது, எப்பொழுது மருத்துவமனையை அணுகவேண்டும், என்ன சிகிச்சைகள் எடுக்க வேண்டும் என்று எளிதாக, தெளிவாக விளக்குகிறார். https://www.youtube.com/watch?v=Z-GP-masaV0 இனி என்னுடைய அனுபவக் குறிப்புகள் 1. இன்றைய தேதியில் காய்ச்சல் வந்தால், அது பெரும்பாலும் கொரானா தான். உடனே டெஸ்ட் எடுத்து விடுங்கள். அரசு எடுக்கும் இலவச டெஸ்ட் என்றால் பாசிட்டிவ் என்றால் கார்பரேசனில் இருந்து உங்களை 2 நாட்களுக்குள் போனில் அழைப்பார்கள். 2 நாட்கள் ஆனாலும் அழைப்பு வரவில்லை என்றால் நெகடிவ் என்று அர்த்தம். (போனை ஸ்விட்ச் ஆப் செய்யாமல் வைத்து கொள்ளவும். போனை மனைவி அல்லது மற்றவர்களிடம் தந்து விட்டு நீங்கள் நன்றாக ஓய்வெடுங்கள்). 2. உடனடியாக ரிசல்ட் தேவைப்படுபவர்கள் தனியார் மருத்துவமனை / லேபுகளுக்கு சென்று டெஸ்ட் கொடுங்கள். இடத்தை பொறுத்து ரூ.1000 லிருந்து 2000 வரை ஆகும். அதிகபட்சம் 8 மணி நேரத்திற்குள் பாஸிட்டிவ் அல்லத...
அன்று காலை மேக மூட்டத்துடன் சிறிதாக தூறிக் கொண்டிருந்தது.. ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. நான்காம் வகுப்பு படிக்கும் இளைய மகளின் வகுப்பு தோழிகளின் வாட்ஸ்அப் க்ரூப்பில் தோழி ஒருத்தி குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியிருந்தாள்.. "இன்னைக்கு க்ளாஸ் இருக்கா...???" 😂😂 ****** எதிரே உட்கார்ந்து வகுப்பை கவனித்துக் கொண்டிருந்த பெரிய மகள் திடீரேன்று சிரித்தார்... "என்னம்மா ஆச்சு...?" "இல்ல வாப்பா.. சார் அங்க யூடூப் ஓப்பன் பன்றார்.. எர்துகிருள் உருது வருது வாப்பா.. அப்போ அவரும் எர்துகிருள் பாக்கறாரா...???" 😀😀 ****** "இவளக ஒன்னு.. எந்த ரூமுக்கு போனாலும் வீடியோவை ஆன் பண்ணிட்டு மனுசன ஃப்ரீயா போக வர விடாம...." என்று மகள்களை நொந்து கொண்டே ஸ்கார்ப் தேடும் மனைவி. அதாவது பிள்ளைகளின் ஆன்லைன் வகுப்புகளின் போது பேக்ரவுண்டில் சில அப்பாக்கள் டிங்கினி மங்கினியாக கூட உலா வரமுடியும்.. ஆனால் அம்மாக்கள் வீட்டில் அணியும் சாதாரண ஆடையில் கூட உலா வரமுடியாது என்று சொல்லாமல் சொல்லி செல்கிறார் மனைவி. 😊😊 ****** எங்கள் tena...
சிஸ்டம் சரியில்லைதான். ஆனால் அது எவ்வளவு சரியில்லை என்று தெரியுமா..? சம்பவம் 1: குப்பைகளை எடுக்கும் மாநகராட்சி தொழிலாளர்களின் உடையில் எழுதியிருந்த "குப்பைகளை வீடுகளிலேயே தரம் பிரியுங்கள்" என்ற வாசகத்தை கண்டு... அப்படி பிரிக்காமல் மக்கும் குப்பை மற்றும் (பிளாஸ்டிக் போன்ற) மக்கா குப்பை என்று அனைத்தையும் நாம் சேர்த்தே போடுவதால் அதனை பின்னால் பிரிப்பவர்களுக்கு ஏற்படும் சிரமமும், அதனால் அரசுக்கும், பூமிக்கும் ஏற்படும் நஷ்டங்களை எல்லாம் கவனத்தில் கொண்டு அவ்வாசகத்தை கண்ட அன்றே மனைவி, மக்களை அழைத்து தரம் பிரிப்பதன் தேவைகளை வலியுறித்தி இரண்டு குப்பை கூடைகளை (Dust bins) வைத்து அதனை வீட்டில் செயல்படுத்தி விட்டோம். பிள்ளைகளும், நாங்களும் ஆர்வமாக குப்பைகளை போடும்போதே தரம் பிரித்து போட்டு வந்து.. குப்பை வண்டி வந்ததும், அவர்களிடம் இரண்டு கூடைகளையும் கொண்டு போய் கொடுத்தால்.. அதனை இரண்டையும் வாங்கி வண்டியில் ஒரே குப்பையில் போடுகிறார்கள்.. ஏன் என்று கேட்டால்.. அப்படி தரம் பிரித்து வாங்கும் வண்டி FC க்கு சென்றுள்ளதாம்.. அது வரும் வரை இவ்வண்டியில் தான் வாங்குவார்களாம். ...
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள்..