தவறான முன்னுதாரணம்..!

Views

Yes, The smallest coffins are the heaviest! :( 

ஒரு இரண்டு வயதுக் குழந்தை இந்த மொத்த உலகமும் பார்த்துக் கொண்டிருக்க கொஞ்சம் கொஞ்சமாக துடித்து இறந்திருக்கிறது. 

இந்த துயர சம்பவத்திற்கு யார் காரணம் என்று எந்த ஒரு சரியான விசாரணையும் மேற்கொள்ளாமல் சிறுவனின் பெற்றோர்களுக்கு நிதி வழங்கியது ஒரு தவறான முன்னுதாரணம். 

இது ஏதோ.. அரசால் பொது இடத்தில் போடப்பட்ட ஆழ்துளை கிணறில் விழுந்து அக்குழந்தை இறக்கவில்லை.  மாறாக குழந்தை தன் பெற்றோர்களின் சொந்த நிலத்தில் அவர்களால் போடப்பட்ட கிணறில் விழுந்து இறந்திருக்கிறது.  அதனால் பெற்றோர்களின் அலட்சியம் தான் இதற்க்கு காரணம், அதனால் அவர்கள்  தண்டிக்கப் படவேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். 

இல்லை.. இது தெரியாமல் நடந்த விபத்து, இதற்கு பெற்றோர்களைக் காரணமாக்க முடியாது என்று வேறு சிலரும் கூறுகிறார்கள்.

பெற்றோர்களும் அது ஏழு வருடத்திற்கு முன்பாக போடப்பட்டு பிறகு மூடப்பட்ட ஆழ்துளை கிணறு. அதன் மேல் ட்ராக்டர் எல்லாம் ஒட்டி இருக்கிறோம்.  சமீபத்தில் பெய்த மழையால் தான் அந்தப் பகுதியின் மண் உள்வாங்கி அதனால் மீண்டும் திறந்து கொண்டது என்கிறார்கள்.  

ஆனால்.. மழை பெய்தாலும் திறந்து கொள்ளாதவாறு சரியான முறையில் மூடியிருக்க முடியாதா என்ற கேள்வியும்,  இதுவே இக்குழந்தை வேறு ஒருவரின் நிலத்தில் இப்படி விழுந்து இறந்து போய் அந்த நில உரிமையாளர் இதே காரணத்தை கூறியிருந்தால் இந்த பெற்றோர்களும், உறவினர்களும், மற்றவர்களும் அதனை ஏற்றுக் கொண்டிருப்பார்களா என்ற கேள்விகளும் நமக்கு எழுகிறது. 

கிட்டத்தட்ட நம்மூரில் எந்த முறையான விசாரணையும் இல்லாமல் சுஜித்தின் பெற்றோர்களுக்கு நாற்பது இலட்ச ரூபாய் (அதாவது அரசும், அரசியல் கட்சிகளும் மற்றும் சில தன்னார்வலர்களும் கொடுத்த மொத்த தொகை) கொடுத்து கொண்டிருந்த அதே சமயத்தில் அமெரிக்காவின் போர்டோ ரிகோ (Puerto Rico)  தீவில் இதே மாதிரி ஒரு குழந்தை இறப்பு சம்பவத்தில் அந்த நீதிமன்றத்தால் ரூ. 56.6 இலட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டது.  அது எதற்க்காக என்று தெரியுமா..?   

ஆம்.. சென்ற ஜூலை மாதத்தில் போர்டோ ரிகோவில் ஒரு சொகுசு கப்பலின் பதினோராவது டெக்கில் (மாடியில்) ஒரு பெரியவர் தனது ஒன்னரை வயது பேத்தியை விளயாட்டு காட்ட ஜன்னலில் உட்கார வைக்க.. திடிரென்று பேலன்ஸ் தவறி அக்குழந்தை பதினோராவது டெக்கில் இருந்து கீழ் தளத்திற்கு விழுந்து இறந்து போனது.  அந்த வழக்கின் தீர்ப்புதான் நாம் இங்கே நிதி வழங்கி கொண்டிருந்த அதே சமயத்தில் வெளியானது.  அந்த நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன தெரியுமா..?  அந்த பெரியவரை Negligence Homicide அதாவது "அலட்ச்சியத்தால் கொல்லுதல்" என்ற குற்றத்தின் கீழ் குற்றவாளி என்று தீர்ப்பு சொல்லி அவரை கைது செய்ய சொல்லியிருக்கிறது. அவர் பெயிலில் வர 80,000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 56.6 இலட்சம் ரூபாயை ஜாமீன் தொகையாக அறிவித்துள்ளது

ஆம்.. அவர்களுக்கெல்லாம் every life matters. ஆனால் இங்கே...??  நம் நாட்டில் life எல்லாம் ஒரு மேட்டர் இல்ல.. வேணா.. every death here may be a political matter!! 

ஒரே பூமிப் பந்தின் மிகச்சரியாக எதிர் எதிர் இடங்களில் அதவும் ஒரே சமயத்தில் நடந்த ஒரே வித சம்பவங்கள் இவை இரண்டும்.  இரண்டு குழந்தைகளின் இறப்பு.. அவைகளுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்புகள் தான் இவை. 

சரி.. நாம் அவ்வளவு தூரம் ஏன் போக வேண்டும்.. நமது நாட்டிலேயே அந்த சட்டம் பாய்ந்திருக்கிறது. 2007ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத்தில் இதே போல் ஒரு பயன்படுத்தப்படாத ஆழ்-துளை கிணற்றில்  குழந்தை இறந்ததற்கு அந்த நில உரிமையாளர் மீது 304 II (Culpable homicide not amounting to murder) என்ற வழக்கு பாய்ந்திருக்கிறது.  இது என்னுடைய சாதாரண தேடலில் கிட்டியது.. இது போன்று இன்னும் எத்தனை வழக்குகள் உள்ளன என தெரியாது.   

இந்த கேள்விகளை, சந்தேகங்களை  எல்லாம் களைவதர்க்காகத்தான் சுஜித் இறப்பு விடயத்தில்  சரியான அதிகாரிகளைக் கொண்டு முறையான விசாரணை மேற்கொள்ளப் பட்டிருக்க வேண்டும் என்கிறேன்.

அந்த முறையான விசாரணைக்குப்  பிறகு இது விபத்து தான், பெற்றோர்களின் அலட்சியம் இதற்கு காரணம் அல்ல என்று தெரியவந்தால் நாற்பது இலட்சம் அல்ல.. நான்கு கோடி ரூபாய் அப்பெற்றோர்களுக்கு தந்தாலும் அது அதிகமில்லை. ஏனென்றால்.. உயிரும், பிரிவும் விலை மதிக்க முடியாதது.!!

ஆனால் அதுவே.. பெற்றோர்களின் அலட்சியம் தான் இந்த அப்பாவி குழந்தையின் இறப்பிற்கு காரணமாக இருந்திருந்தால்.. நம் அரசும், அரசியல் கட்சிகளும் செய்தது ஒரு தவறை தண்டிப்பதை விட்டுவிட்டு,  ஊக்குவிக்கும்  ஒரு தவறான முன்னுதாரணம்..!  மேலும் ஒரு அப்பாவி குழந்தைக்கு இழைக்கப்பட்ட அநீதி..!!!

இதையெல்லாம் கேள்வி கேட்கவேண்டிய நமது நீதிமன்றங்களும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றன. 

பெற்றோர்களுக்கு ஆதரவாக பேசும் சிலர்.. அவர்களுக்கு ஒரு குழந்தை போய்விட்டதே என்ற பரிதாபத்தில் பேசுகிறார்களாம்..

ஆனால்.. தான் எந்த தவறும் செய்யாத.. காற்றும், நீரும் இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக உயிரை விட்ட அந்த பிஞ்சுக்காக பேசுகிறேன் நான்..! ஒருவேளை மற்றவர்களின் அலட்சியப் போக்கால் அவன் இறந்து போயிருந்தால் அவனுக்கு நீதி வேண்டும் என்கிறேன் நான்..!!!

ஆம்.. பெற்றோர்களுக்கு குழந்தை போச்சு என்கிறீர்கள் நீங்கள்..

வாழ வேண்டிய சுஜித்திர்க்கு  உயிரே போச்சு என்கிறேன் நான்..!!!

#RIPSujith என்றும் #SorrySujith என்கிறீர்கள் நீங்கள்..

அதோடு சேர்த்து #JusticeForSujith ஐயும் கேளுங்கள் என்கிறேன் நான்..!!

ஒரு வேளை  பூமிப்பந்தின் இப்புறத்தில் உயிர்களுக்கு மதிப்பில்லை என்று தெரிந்துதான் என்னவோ தான் விழுந்த ஆழ் துளையின் மேலும் மேலும் கீழிறங்கி பூமியின் மறுபுறத்திற்கு சென்று கொண்டிருந்தான் நம் தமிழ் மகன் சுஜித் வில்சன்..?? :(

சுஜித்தின் மீட்புபணியை நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த இன்னொரு வீட்டின் குழந்தை குளியலறையில் நீர் நிரம்பிய வாளியில் மூழ்கி இறந்திருக்கிறது. 

இறுதியாக..

மாண்ட பிஞ்சுகளே.. கடவுள் நம்பிக்கையாளனான எனக்கு இந்நேரம் நீங்கள் கடவுளின் சொர்க்கத்தின் நிம்மதியாக விளையாடிக் கொண்டிருப்பீர்கள் என்று தெரியும்..

நீங்கள் எங்களுக்காக ஒரே ஒரு உதவியை செய்யுங்கள்..

நமது நாட்டு அரசியல்வாதிகளுக்கும், நீதிமன்றங்களுக்கும், கூடுதல் கவனமாக இருக்க பெற்றோர்களுக்கும் நல்ல புத்தி தர சொல்லி இறைவனை கேளுங்கள்..!!

Comments

  1. கரெக்டா சொல்லி இருக்கீங்க ரபீக். இது தான் நானும் நினைத்தேன்

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள்..

Popular posts from this blog

கொரானா வந்து வீட்டில் தனிமைப்படுத்துதல் - சில அனுபவக் குறிப்புகள்...

நம்ம வீட்டுப் பிள்ளை

ஏன் இந்த தயக்கம்..?